தமிழீழப் போராட்டம் நம் முன்னே உள்ள கடமைகள்
₹20.00
Out of stock
Description
தமிழீழத்தை அழிக்க ஏன் இத்தனை நாடுகள் கைகோர்த்தன, தமிழீழம் என்பது புவிசார் அரசியலில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கிறது, இந்தியப் பெருங்கடலின் அரசியல் என்ன, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் என்ன, உலகத்தின் சுய நிர்ணய உரிமை போராட்டங்களிலிருந்து நாம் கற்க வேண்டியது என்ன, விடுதலைப் புலிகளின் அரசியலிலிருந்து நாம் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டியது என்ன, தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்க நாம் செய்ய வேண்டியது என்ன என பல்வேறு கோணங்களைப் பற்றிய விவாதம் நமக்கு தேவையாக இருக்கிறது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற 2017ம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வில் மேற்குறிப்பிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய விரிவான உரையை ஆற்றியிருந்தார். தமிழீழத்தின் புவிசார் அரசியலை குறித்த ஒரு அறிமுகத்தினை நம்முடைய இளைஞர்களுக்கு அளிப்பதற்காகவும், தமிழீழ போராட்டம் குறித்த ஒரு அகன்ற புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் அந்த உரையினை சிறு நூலாக்கி நிமிர் வெளியீடாக கொண்டுவந்திருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.